Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: #தாய்த்தமிழில்_வழிபாடு | திருப்போரூர் முருகன் கோவில் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact Us To Add Your Business

தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு

திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான (செப்டம்பர் 3 ) நாளை காலை 10 மணிக்கு *திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி வழிபடவும், கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் தமிழ் வழிபாட்டைச் செய்யுமாறு வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு"
இது கோரிக்கையல்ல, நமது உரிமை!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. Mr. creative

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் உங்கள் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அன்னை தமிழை காக்கும் நாம் தமிழால்

  2. அஆஞா.ரஞ்சன்

    தமிழ்குடியில் பிறந்ததால்
    பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
    நாம்தமிழர்.

  3. Mani Maran

    எம்பெருமான் திரு தளத்தில் தமிழில் பூசைகள் செய்து வழிபாடு அனைத்து தளங்களில் நடக்கவேண்டும்
    தமிழில் ஓதும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் மகிழ்ச்சி

  4. eli kuncharalingam

    தமிழர்கள் சைவர்கள் அவர்கள் இந்துக்கள் அல்ல; ????
    தமிழர்களாகிய எங்களுக்கும் தமிழ் ஆகம விதிகள் இருக்கிறது;
    எங்கள் தமிழ்திருநாட்டில் என் கடவுளை தமிழ் ஆகம விதிகள் படி தமிழிலில் அர்ச்சனை /வழிபாடு/பிரார்த்தனை ;
    ஓம் நம சிவாய …ஓம் முருகா..
    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????

  5. Con V

    இன்று 03-09-22 காலை 11:30 மணி அளவில் மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாக ஆணையரிடம், அரசு ஆணைப்படி, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, இனி அர்ச்சனை, குடமுழுக்கு ( கும்பாபிசேகம்) போன்றவற்றை தமிழ் ஓதுவார்களால், தமிழில் நடத்துமாறு நினைவூட்டு கடிதம் வழங்கப்பட்டது. பிறகு தமிழில் அர்ச்சனையும் நடத்தப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published.

*
*